Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 14, 2013

    ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

    ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சிதம்பரத்தில் நடந்தது. மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிடக்கோரி மத்தியத்
    தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பு சார்பில் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
    கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடந்தது.
    மாவட்டத் தலைவர் சிற்றரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் அறிவழகன் வரவேற்றார். அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜீவானந்தம், மாநில முன்னாள் செயலர் குருசாமி, மாவட்டச் செயலர் கிறிஸ்டோபர் ஆகியோர் பொது வேலை நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்தனர்.
    ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா, தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு முந்தைய வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடருதல், ஓய்வூதிய நிதியில் 49 சதவீதம் அந்திய நேரடி முதலீட்டினை அனுமதிக்கும் முடிவினைக் கைவிடுதல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிரான மத்திய, மாநில அரசு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

    No comments: