Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 5, 2013

    ஜனவரி மாத ஊதியம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதி

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியம் வழங்காததால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டத் தலைவர் ஆர். முருகன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 80 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 270
    ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய விவரம் அந்தந்த தலைமையாசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு, உதவி தொடக்கக் கல்வி அலுவலகப் பணியாளர்களால் தொகுக்கப்படும்.

    பின்னர், கருவூலத்துக்கு அனுப்பி இசிஎஸ் முறையில் ஒவ்வொரு மாத இறுதி நாளில் ஊதியம் பெற்று வழங்கப்பட வேண்டும்.

    ஆனால், சங்ககிரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வாசுகி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் இந்தப் பணியை முறையாக செய்யாததால் ஜனவரி மாத ஊதியம், பொங்கல் போனஸ் உள்ளிட்டவற்றை பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஊதியம் பெற்றுத் தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    No comments: