Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 4, 2013

    பேராசிரியர்கள் நியமனம்: முறைகேடுகளைத் தடுக்க போட்டித் தேர்வு வேண்டும்

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று விரிவுரையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இப்போதுள்ள முறையின் படி
    நேர்முகத் தேர்வுக்கும், அனுபவத்துக்கும் அதிக மதிப்பெண் இருப்பதால் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    புதிய முறையில் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (நெட்), மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு (செட்) ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்க நிலையில், இந்தத் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகமான காலிப்பணியிடங்கள் இருந்ததால் அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய தேர்வு முறையை தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்படி, பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், பி.எச்டி பட்டத்துக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. பி.எச்டி. பட்டம் பெறாமல் எம்.பில். பட்டத்துடன் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு, மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்ணும், தகுதித் தேர்வுகளில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

    அரசுக் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில் கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட இந்தத் தேர்வு முறையால் தரமான ஆசிரியர்கள் அதிகம் தேர்வாகவில்லை என தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் கோ.க.பழனி கூறினார். இந்த மதிப்பெண் முறையால் நெட், ஸ்லெட் (செட்) தேர்வுகளில் தகுதி பெற்றவர்களும் அதிகமான அளவில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு பெறவில்லை. நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் அனுபவச் சான்றிதழ் போன்றவற்றால் நிறைய பேர் தேர்வானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் பெற்றுக்கொண்டு போலியான அனுபவச் சான்றிதழ்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், புத்தகம் வெளியிட்டிருந்தால் மதிப்பெண் என்ற பிரிவு இருந்தது. இதற்காகவும் நிறைய பேர் பணம் செலுத்தி புத்தகம் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த காரணங்களால் புதிய மதிப்பெண் முறையை பரிந்துரைத்த தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகமே அதை எடுத்துவிட்டு போட்டித் தேர்வு நடத்துமாறு அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று விரிவுரையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

    பொறியியல், பாலிடெக்னிக் போட்டித் தேர்வுகள்: அரசுப் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் 290 பேர் போட்டித் தேர்வுகள் மூலம் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். சுமார் 65 ஆயிரம் பங்கேற்ற இந்தத் தேர்வுகள் எந்தவித முறைகேடும் இன்றி சிறப்பாக நடைபெற்றதாக கல்வித் துறையினர் கூறுகின்றனர். இதில் போட்டித் தேர்வு மதிப்பெண்ணோடு, அனுபவத்துக்கு 2 மதிப்பெண்ணும், உயர் கல்விக்கு 8 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் விரிவுரையாளர்களை நியமிக்க இதுவே சிறந்த வழிமுறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த 2009-10-ம் ஆண்டில் 1,022 விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக ஊழல் கண்காணிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. பணம் கொடுத்து பி.எச்டி. பட்டம்:  சில பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் படிப்புகள் ஏதும் முடிக்காமல் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் பி.எச்டி. பட்டம் வழங்கப்படுவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர். அதேபோல், நேர்முகத் தேர்வு இருந்தால் பல தவறுகள் நடக்கும் என்பதால் அந்தத் தேர்வுக்கான மதிப்பெண்ணை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

    நெட், செட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள பி.எச்டி. மாணவரான வேல்முருகன் கூறும்போது, "இப்போதுள்ள தேர்வு முறையில் இளைஞர்களும், தகுதியானவர்களும் வருவதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. தகுதித் தேர்வுகளுக்கும், இதில் பெறும் மதிப்பெண்ணுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார். நியாயமாக தேர்வு செய்தால் போதும்: ஏற்கெனவே நெட், செட் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு வைக்கக் கூடாது. இப்போதுள்ள மதிப்பெண் முறைகளைப் பின்பற்றி, விரிவுரையாளர் நியமனத்தை நேர்மையாக நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.பிச்சாண்டி கூறினார்.

    நெட், செட் தேர்வுகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் தேர்வு பெறுவதால் மற்றுமொரு தேர்வை வைத்தால் தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 21 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டபோதும் முறைகேடு புகார்கள் எழவில்லை. ஆனால், இப்போதுள்ள முறையில் 1,063 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் நடைபெற்றால் முறைகேடுகள் நடைபெறும் என்கிற அச்சம் தகுதியானவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும் அல்லது இப்போதைய மதிப்பெண் முறையையும், நேர்முகத் தேர்வையும் மாற்ற வேண்டும் என பல தரப்பினர் கோருகின்றனர்.

    1 comment:

    kalvikkathirr said...

    கண்டிப்பாக முறைகேடு நடைபெறும். இளைஞர்களே விழித்தெழுங்கள்.நீதிமன்றத்தில் முறையிட்டாவது இந்த மோசடி தேர்வு முறையை ரத்து செய்யுங்கள்.