Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 4, 2013

    அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை(239) திருத்தம் செய்ய வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அமைப்பு செயற்குழு கூட்டம் நேற்று கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    கூட்டத்திற்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் விஜயன் முன்னிலை வகித்தார். பரமசிவம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
    தமிழக அரசால் கடந்த 20.9.2012ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1978-79 கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட பி.டி., அல்லது பி.இ.டி.,முடிக்காத முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதனால் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணிப்பலன், மற்றும் பணப்பயன்கிடைக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    எனவே இந்த அரசாணையை திருத்தம் செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    No comments: