Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 13, 2013

    77 தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் பணிநியமன உத்தரவுகள்

    நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு செய்ததாக, டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொடக்கக் கல்வி தலைமை ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
    பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையில் ரூ. 81 லட்சம் முறைகேடு நிகழ்ந்ததாக கூறி, தமிழக அரசு 77 தலைமை ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட 77 பேரில், 67 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மீ்ண்டும் பணிஉத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

    டிஸ்மிஸ் செய்யப்பட்ட 77 பேரில், 7 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. மற்ற மூவரில் இருவர் நர்சரி பள்ளி தலைமையாசியர்கள் மற்ற ஒருவர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர். இவர்கள் மூவருக்கும் விரைவில் பணிஉத்தரவு வழங்கப்படும் என தகவல்கள் வ‌ெளியாகியுள்ளன.

    No comments: