குரூப்-2 தேர்வு முடிவு, அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.நகராட்சி கமிஷனர், சார்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட பல்வேறு
பதவிகளில், காலியாக உள்ள, 3,687 இடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஆக., 12ல், டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வை நடத்தியது.
தேர்வு நாளன்று, கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியான தகவல், ஈரோட்டில் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவ., 4ல், மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது.
இதில், 3.74 லட்சம் பேர் பங்கேற்றனர்.இதன் முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வாரம், தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு நாளன்று, கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியான தகவல், ஈரோட்டில் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவ., 4ல், மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது.
இதில், 3.74 லட்சம் பேர் பங்கேற்றனர்.இதன் முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வாரம், தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment