Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 14, 2013

    218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக உயர்த்தி அரசு உத்தரவு

    தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 2001 கல்வியாண்டு முதல் தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.அது போல் 2010-11 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித்திட்டதின் கீழ் 218 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.இப்படி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் 2012-2013-ம் கல்வியாண்டில் 6,7,8 வகுப்புக்களுடன் முழுமை பெற்ற நடுநிலைப்பள்ளிகளாக இயங்குகின்றன.எனவே 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்த தொடக்க கல்வி இயக்குநர் கோரியுள்ளார். இதனையடுத்து 2010-11 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 218 தொடக்கப்பள்ளிகள் 2012-13ம் கல்வியாண்டில் முழுமை பெற்ற நடுநிலைப்பள்ளிகளாக இயங்குவதால் அப்பள்ளிகளில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலையுயர்த்தப்படுகிறது.
     அவ்வாறு நிலையுயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களிலிருந்தும்,பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் ஆகிய பணியிடங்களிலிருந்தும் முன்னுரிமை பட்டியலின் படி,பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மூலமாக நிரப்பிக் கொள்ள தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: