Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 13, 2013

    10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அறிவுறுத்தல்

    10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அறிவுறுத்தியுள்ளார்.
    மார்ச் 2013ல் நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வினை, முதன் முறையாக எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள் (Direct Private Candidates) தாங்கள் அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்ட பள்ளியிலேயே செய்முறைத் தேர்வுகளுக்கு வருகை புரிதல் வேண்டும்.

    செய்முறைத் தேர்வுகள் பிப்.,20 முதல் பிப்.,28ம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகளில் கலந்து கொள்ள தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (Admission Slip) சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் பிப்.,18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

    செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான செய்முறை நோட்டுப் புத்தகத்தை (Record Note) தவறாது செய்முறைத் தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட தேர்வர்கள் மட்டுமே கருத்தியல் (Theory) தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    செய்முறைத் தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் இதர விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை அணுகலாம்.

    No comments: