Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 10, 2015

    சிறந்த கணினி மென்பொருள்களுக்கு முதல்வர் விருது பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    மாணவர்களின் சிறந்த கணினி மென்பொருள்களுக்கு முதல்வர் விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதற்காக செப்.11-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


    செல்லிடப்பேசியின் புதிய பயன்பாடுகள்-ஜிஐஎஸ் தொழில்நுட்பம், பொது சுகாதாரம்- பள்ளிக் கல்வி, மாற்றுத்திறனாளிகள், இதர சமூகப் பிரிவு உள்ளிட்ட துறைகளில் சிறந்த, பயனுள்ள மென்பொருள் படைப்புகள் விருதுக்கு கோரப்பட்டுள்ளன.


    தகுதி: சிறந்த கணினி படைப்புகளை அனுப்புவதற்கு அரசு, அரசு உதவிபெறும் தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முழுநேர பட்டயம், பட்டம், முதுநிலை, முனைவர் பிரிவுகளில் பயின்றுவரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

    மாவட்ட அளவிலான விருது: சென்னை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சிறந்த மென்பொருள் படைப்புகளுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,500, மூன்றாம் பரிசு ரூ.5,000 என வழங்கப்படும். 
     இந்த மூன்று பரிசுகளில் முதல் பரிசு பெறுவோர் மாநில அளவில் போட்டியிட அனுமதிக்கப்படுவர். 

    மாநில விருது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மென்பொருள் படைப்புகளில் முதல் மூன்று படைப்புகளுக்கு முதலமைச்சர் விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. 

    இதில், முதல் பரிசு பெறும் திட்டத்திற்கு ரூ.2,50,000-ம், இரண்டாம் பரிசு ரூ.2 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1,50,000 என வழங்கப்படும். மேலும், பரிசுத் தொகையோடு அணியில் உள்ள அனைவருக்கும் கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்படும். 

    இதன்படி, ஒவ்வொரு கல்லூரியும், புதிய மென்பொருள் தயாரிப்பதற்கு குறிப்பிட்ட பிரிவில் 4 முதல் 8 பேர் கொண்ட குழுவை அமைத்துக் கொள்ளலாம். 

    மேலும், கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளைக் கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று, "கணினி மென்பொருள்களுக்கான முதலமைச்சர் விருது' என்று குறிப்பிட்டு செப்.11-க்குள் விண்ணப்பிக்க 
     வேண்டும். 

    இதற்கான, விண்ணப்பத்தை www.chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: