Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 6, 2015

    ஆசிரியர் டிப்ளமோ: நாளை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

    தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.7) நடைபெற உள்ளது. 
    இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


    பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஏற்கெனவே ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.இந்தக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதற்காக அழைப்புக் கடிதம் தனியே அனுப்பப்படாது.

    முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்ற சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றைக் கலந்தாய்வின் போது எடுத்துவர வேண்டும்

    இதில் பங்கேற்க வரும் மாணவர்கள் The Director, SCERT, Chennai-6 என்ற முகவரியில் ரூ.3,500-க்கான கேட்பு வரைவோலையை (டி.டி.) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: