Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 10, 2015

    ஓவியம் உள்ளிட்ட கலைப் பிரிவுகளுக்கு முதல்முறையாக பாடத்திட்டம் வடிவமைப்பு

    ஓவியம் உள்ளிட்ட கலைப் பிரிவுகளுக்கு முதல்முறையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் வெளியிடப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


    தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கு பாடத்திட்டங்கள் இல்லாமல் பெயரளவில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கை அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.அதன் படி, இரண்டு கட்டமாக நடந்த பாடத்திட்ட தயாரிப்பு பணிமனை இரு நாட்களுக்கு முன், நிறைவு பெற்றது.


    சென்னை கவின் கலை கல்லுாரி பேராசிரியர்கள் ஆலோசனை படி, அரசு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் இப்பணி நிறைவு பெற்றுள்ளது.ஓவியத்தை பொறுத்த வரை, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புள்ளி, கோடு, வடிவம், அமைப்பது தொடர்பான பாடத்திட்டமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பனை ஓவியம், ஒன்பதாம் வகுப்புக்கு காகிதங்களை கொண்டு வெட்டி ஒட்டுதல், சோப்பு கட்டிங் தயாரித்தல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்று ஓவியங்கள், குகை ஓவியங்கள், நாகரிக உடைகள் ஆகியவையும் பாடத்திட்டமாக உள்ளது. 

    அதே போன்று, இசை, தையல், உடற்கல்விக்கு பாடதிட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கலை பாடங்களுக்கு தற்போது புதிய பாடத்திட்டங்கள் வடிவமைத்து, உயிரோட்டம் அளித்துள்ளனர். இதுவரை, பள்ளிகளில் பெயரளவில் செயல்பட்டு வந்த பிரிவுகள் முறையாக நடக்கும். மேலும், ஓவிய பாடத்துக்கு சமச்சீர் பாடத்திட்டத்தின்படி கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கப்படவுள்ளது. இம்மதிப்பெண், மாணவர்களின் ஒவ்வொரு மாத ரிப்போர்ட் கார்டிலும் இடம்பெறும். நடப்பு கல்வியாண்டில், பாடத்திட்டம் வெளியிடப்படவுள்ளதாக தெரிகிறது,'' என்றார்.

    No comments: