கோவை ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் மண்டல அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டி கோவை கவுண்டம்பாளையம் லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சென்ற சனிக்கிழமை (01-08-2015)நடைபெற்றது. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 6,7,8 வகுப்பிற்கான இடைநிலைப் பிரிவில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகேயுள்ள மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ந.ர.காவ்யா முதலிடம் பெற்றார். மேலும் இவர் செப்டம்பர் 26ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றுள்ளார்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை பள்ளி தலைமையாசிரியை பத்திரம்மாள்,சக ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment