Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 20, 2015

    மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

    இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
    கடந்த, 2013-14 முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக்குகளில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. கடந்த, 2011-12ல், 9 லட்சம் பேர்; 2012-13ல், 7 லட்சம் பேர்; 2013-14ல், 5 லட்சம் பேருக்கு,இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. கடந்த நிதியாண்டு, 6 லட்சம் பேருக்கும், நடப்பாண்டு, 6 லட்சம் பேருக்கும், இலவச லேப்டாப் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
    இந்நிதியில், தமிழ்நாடு மின்னணு நிறுவனமான, 'எல்காட்' மூலம், லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று ஆய்வு செய்தார்.
    அப்போது, அவர் அதிகாரிகளிடம், ''இலவச லேப்டாப் வழங்கும் திட்ட இலக்குபடி, டிசம்பருக்குள், அனைவருக்கும் லேப்டாப் வழங்க வேண்டும்,'' என்றார்.

    No comments: