Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 3, 2015

    யு.ஜி.சி.,க்கு மூடுவிழா? மத்திய அரசு முடிவு

    பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும், யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி, நாட்டின் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக, கல்வி விவகாரங்களை கவனிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும், திட்டக் கமிஷனுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பும், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.ஊழல், முறைகேடு, வெளிப்படையான செயல்பாடு இன்மை போன்றவற்றால், யு.ஜி.சி.,யின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமாகி உள்ளன. அதை சீரமைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து, ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு, யு.ஜி.சி.,யின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான, ஹரி கவுதம் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

    அந்த கமிட்டி, மார்ச் மாதம், மத்திய அரசிடம் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:
    * யு.ஜி.சி., அமைப்பையே கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
    * பிஎச்.டி.,யில் சேருவதற்கு, தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும்.
    * துணை வேந்தர்கள், ஒரு பதவி காலம் மட்டுமேநியமிக்கப்பட வேண்டும்.
    இந்த பரிந்துரைகளை அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக, பார்லிமென்டில், சில நாட்களுக்கு முன், எம்.பி., ஒருவரின் கேள்விக்கு, மனிதவள மேம்பாட்டுத்
    துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார்.

    No comments: