Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 19, 2015

    பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கண்ணோட்டம்.

    இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் வழக்கமாக பதவி உயர்வு என்றாலே போட்டி போட்டுக் கொண்டு செல்வர். ஒன்றிய முன்னுரிமை யில் தங்களது பெயர் மற்றும் வரிசையை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருப்பர். ஆனால் நேற்று 11பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று கூறி 3 ஆண்டு பணித் துறப்பு செய்து விட்டனர்.


    காரணம் இவர்கள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறப்பு
    நிலை பெற்று 6% கூடுதலாக ஊதியம் பெறுவது தான். இன்றைய நிலை களில் பதவி உயர்வு சென்றால் 3% மட்டுமே கூடுதலாக ஊதியம் கிடைக்கும். மேலும் தற்போது பெறும் சிறப்பு ப்படி ₹500 ரத்தாகி விடும். விலையில்லா பொருட்கள் பெற்று வழங்குவது உள்ளிட்ட தலைமை ஆசிரியர் பணிச்சுமையும் கூடுதலான வேலை.
    மேலோட்டமாக இவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன் கீழ் கண்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    பணி ஓய்வு பெறுவது இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளது?
    மூன்று ஆண்டு பணி துறப்பிற்க்குப் பின் எத்தனை ஆண்டுகளில் பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது?
    பதவி உயர்வு நிலை களில் தேர்வு நிலை /சிறப்பு நிலை வாய்ப்புகள்?
    அடுத்த பட்டதாரி ஆசிரியர் /நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்புகள்?
    அடுத்த ஊதியக்குழு ஊதியம் வித்தியாசங்கள்? இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    5வது ஊதியக்குழுவில் பதவி உயர்வுக்க்கு 5% கூடுதலாக கொடுத்து 3 ஊதிய உயர்வு வரை கூடுதலாக பெற்றோம். இடைநிலை ஆசிரியர் தேர்வு நிலை +ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலம் சேர்த்து தலைமை ஆசிரியர் நிலையில் தேர்வு நிலை பெற்று வந்தோம். இன்றைக்கு இவற்றை இழந்து உள்ளோம்.
    ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி இழந்த பலன்களைப் பெற தொடர் முயற்சி வேண்டும்.

    No comments: