Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 7, 2015

    வரலாற்றில் முதல்முறையாக பென்சன்நிதியை பங்குசந்தையில் முதலீடு செய்யதிட்டம்


    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஈக்விட்டி சந்தைகளில் பென்சன் நிதி முதலீடு செய்யப்படுவது 64 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.


    இதுகுறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் ஆணையர் கே.கே.ஜாலன் தெரிவித்தவை பின்வருமாறு:-

    நடப்பு நிதியாண்டு முதல் வரும் மார்ச் 2016 வரை இந்திய பங்குச்சந்தைகளின் இரண்டு முக்கிய குறியீட்டெண்களை பின்தொடரும் ஈ.டி.எப். பண்டுகளில் பென்சன் நிதியை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், பங்குச்சந்தை அபாயத்தை குறைப்பதற்காக முதற்கட்டமாக ஈ.டி.எப். வழியாகவே முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வருவாயை பொறுத்து ஈக்விட்டி சந்தையில் அதிகமாக முதலீடு செய்வது பற்றி ஆலோசிக்கப்படும்.

    இவ்வாறு கே.கே.ஜாலன் தெரிவித்தார்.

    ஈ.பி.எப்.ஓ. நிறுவனம் தற்போது ரூ.8.5 டிரில்லியன் சேமிப்பு பணத்தை அரசு பத்திரங்கள் வாயிலாக நிர்வகித்து வருகிறது. ஏற்கனவே, புதிய பென்சன் நிதி பணத்தில் 5 சதவீதத்தை ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இவற்றில் 3-ல் ஒரு பகுதியை தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்களை பின்தொடரும் ஈ.டி.எப். பண்டுகளிலும், மீதமுள்ளவை மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்களை பின்தொடரும் ஈ.டி.எப். பண்டுகளிலும் முதலீடு செய்யப்படும்.

    நடப்பு ஆண்டின் நிலவரப்படி, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் 3.7 சதவீதமும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 2.9 சதவீதமும் கடந்த ஆண்டை காட்டிலும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.



    No comments: