Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 10, 2015

    50 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடம் நிரந்தரமாகிறது!

    மத்திய அரசுத் திட்டத்தில் பணியாற்றும், 50 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள், அலுவலர்கள் இடங்கள், ஐந்தாண்டுகளுக்கான நிரந்தர இடங்களாக மாற்றப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்ட, 1,000 உயர்நிலை, 8,000 நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட, 50 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) ஆகிய திட்டங்களின் கீழ், நிதி ஒதுக்கப்பட்டு மாத ஊதியம் தரப்படுகிறது.

    இந்த திட்டங்களுக்கு, மத்திய அரசிடமிருந்து வரும் நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் மாறுபடும் என்பதால், மாதந்தோறும் சம்பளம் வழங்க, தனித்தனி அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. அதனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி, 1,764 இளநிலை உதவியாளர்கள், 4,393 ஆய்வக உதவியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும் கடந்த மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசுத் திட்டங்களில் உருவாக்கப்பட்ட பணியிடங்கள், தற்காலிகமாக கருதப்படுவதால், இதன் கீழ் பணிபுரிவோருக்கு மாதந்தோறும் பணியிடத்துக்கு கால நீட்டிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பின் சம்பளத்துக்கு தனி ஆணை பிறப்பிக்க வேண்டியுள்ளது. அதனால், மாத சம்பளம் வழங்குவதில் குழப்பம் ஏற்படுகிறது.


    பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் திட்டத்திலுள்ள பணி இடங்களை, ஐந்தாண்டுகளுக்கு நிரந்தரப் பணியிடங்களாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி பெற, தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது; இரண்டு மாதங்களில் பிரச்னை தீரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    No comments: