பத்தாம் வகுப்பு உடனடி சிறப்பு துணைத்தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகிறது.தமிழகத்தில், 10ம் வகுப்பு உடனடி சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள், ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் முடிந்து, மதிப்பெண் விவரம் மற்றும் பதிவெண் பட்டியல் தயாராக உள்ளது.
இந்த விவரங்களை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், இன்று காலை, 10:00 மணிக்கு, www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடுகிறது. 'பட்டியலில் இடம்பெறாத, பதிவெண்களுக்கான விடைத்தாள்களில், மறுகூட்டலில், எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை' என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment