Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 10, 2014

    மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்


    ஆசிரியரின் பாதுகாப்பிற்கு எதிரான உத்தரவுகளை நீக்க கோரியும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரியும், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, மாநிலம் முழுவதும், நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.


    கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: குழந்தைகள் உரிமை மற்றும் நலனை முதன்மைப்படுத்தி, அரசு உருவாக்கியுள்ள விதிகளால், மாணவர்களிடம், ஆசிரியர்கள் மீதான பய உணர்வு குறைந்து விட்டது. பல மாணவர்கள், போதை பாக்கு போட்டும், மது அருந்தி விட்டும், பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்கள், சரியாக படிக்காததைக் கூட, கண்டிக்காமல் இருந்து விடலாம்.

    ஆனால், ஒழுங்காக, பள்ளிக்கு வராமல் இருப்பதைக் கூட கண்டிக்க முடியவில்லை. ஆசிரியைகளை, மாணவர்கள் கேலி செய்தாலும், தட்டி கேட்க முடியவில்லை. எனவே, மாணவர்கள் உரிமையை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ள அரசு உத்தரவுகளை உடனே நீக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள் பாதுகாப்பையும், அரசு உறுதிபடுத்தும் வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இதை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், வரும் 10ம் தேதி (நாளை), அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகளில் கருப்பு பட்டை அணிந்தும், பள்ளி முடிந்தவுடன், பள்ளி நுழைவாயில் முன், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments: