பொள்ளாச்சியில், மாணவர்களின் அடைவுத்திறன் மேம்பட பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை, வால்பாறை ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ெஹலன் மேரி தலைமை வகித்தார். உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் (பொ) முன்னிலை வகித்தனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் செயலர், மாநில திட்ட இயக்குனர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்), இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கூட்டம் கோவையில் கடந்த 11ம் தேதி நடந்தது. கோவை, திருப்பூர், உதக மண்டலம் மாவட்டங்களிலுள்ள ஒன்றியங்களைச் சேர்ந்த மேற்பார்வையாளர் (பொ), உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாணவர்களின் அடைவுத்திறன் தமிழ் சரளமாக எழுதுதல், வாசித்தல், ஆங்கிலம் சரளமாக எழுதுதல், வாசித்தல்; கணிதம் எளிய மற்றும் கடின கணக்குகள் செய்தல்; அக்டோபர் 2013 தேர்வுடன் ஒப்பிட்டு ஏன் பின்தங்கிய நிலைக்கான காரணம், அதை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும்.அடைவுத்திறன் மேம்பட தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் யாவை, போன்ற கேள்விகளும், அதற்கான தீர்வுகளும், பள்ளிகளில் செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு 'ஏ, பி,சி,டி, இ' என தரம் வழங்க வேண்டும். கணித உபகரணப்பெட்டி, செயல்திட்டம், புத்தக பூங்கொத்து, 'டிவி', 'டிவிடி' 'சிடி' பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
இதே போல் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அடைவுத்திறன் மேம்பட ஆய்வு கூட்டம் நடந்தது. இதுபோன்று, பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை, வால்பாறை ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், டிச.,2014ல் மாநில அளவிலான அடைவுத்திறன், தேர்வில் மாணவர்களிடம் வாசித்தல், எழுதுதல், கணித அடிப்படையில் செயல்பாடுகள் முன்னேற்றம் இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.இதில், தெற்கு, வடக்கு, ஆனைமலை, வால்பாறை பகுதியை சேர்ந்த தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
L
No comments:
Post a Comment