Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 24, 2014

    மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க உத்தரவு

    பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு கையேடு வழங்கி பயிற்சி அளிக்க தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, இவ்வகுப்புகளில் காலாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் (மெல்ல கற்கும் மாணவர்கள்) கண்டறியப்பட்டு, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பாடவாரியாக கற்பிக்க, சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில்,இந்த கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.
    மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட இந்த சிறப்பு கையேட்டில் முக்கிய வினாக்கள், அதற்கான விடைகள் இடம் பெற்றுள்ளன. அரசு மற்றும உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மெல்ல கற்கும் மாணவர்களிடம் இவை வழங்கப்படும். இதைப் படித்தால், அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு, அதிக மதிப்பெண்களும் பெறலாம்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

    No comments: