Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 29, 2014

    கல்வி, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது

    கல்வி, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:


    நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு நிகழ் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மனித வள மேம்பாட்டுக்குத் தடை போடும் இந்த நடவடிக்கை வருத்தமளிக்கிறது.

    நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.80,043 கோடியும், கல்வித் துறைக்கு ரூ.77,307 கோடியும்,

    சுகாதாரத் துறைக்கு ரூ.30,645 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடுகள் மிகவும் குறைவானவை என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.20,000 கோடியும், கல்வித் துறைக்கு ரூ.11,000 கோடியும், சுகாதாரத் துறைக்கு சுமார் ரூ.7,000 கோடியும் குறைக்கப்பட இருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதை நடைமுறைப்படுத்தினால் சமூகத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    எனவே, கல்வி, சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கும் முடிவைக் கைவிட்டு, அனைத்துத் துறைகளும் சம அளவில் வளர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    No comments: