Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 25, 2014

    அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்தானதால் சாலை மறியல்


    முன்னறிவிப்பின்றி, அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்தானதால், ஆர்வமுடன் பங்கேற்க வந்த பெண்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.


    அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கான, நேர்முகத் தேர்வு, நேற்று நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விண்ணப்பித்தோர், அதிகாலை முதலே, பகுதிகளில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு ஆர்வமுடன் சென்றனர். அங்கு, நேர்முகத்தேர்வுக்கான அறிகுறி ஏதும் இல்லை. நீண்ட நேரம் அலுவலகம் திறக்கப்படாததால், தேர்வர்கள் அதிருப்தியில் திரும்பிச் சென்றனர்.

    சென்னை, புதுப்பேட்டையில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலத்திற்கு வந்த பெண்கள் ஆத்திரமடைந்து, எழும்பூர் ஆதித்தனார் சாலையில் கூடி, திடீரென மறியலில் ஈடுபட்டனர். எழும்பூர் போலீசார் பேச்சு நடத்தினர். அங்கு வந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், "நேர்முகத் தேர்வு நடத்த, கோர்ட் தடை விதித்துள்ளது. அதனால், நேர்முகத்தேர்வு நடத்தப்படவில்லை" என்றனர்.

    அறிவிப்பு பலகையிலும் விவரத்தை ஒட்டியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    No comments: