Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 24, 2014

    மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்கள் வாந்தி மயக்கம்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள இருகையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்புவரை 40 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். நேற்று தலைமை ஆசிரியர் அடைக்கலசாமியும், சமையலர் செல்வக்குமாரியும் விடுப்பில் இருந்துள்ளனர்.

    சத்துணவு அமைப்பாளர் திருஞாணம் அருகிலுள்ள பள்ளிக்கு சென்றுவிட்டார். இதனால் அருகிலுள்ள சுத்தமல்லி பள்ளியின் உதவியாசிரியர் குமணன் இருகையூர் பள்ளியினை பொறுப்பேற்று நடத்தி வந்துள்ளார். இதனால் மதிய உணவு சமைப்பதற்கு பள்ளியின் எதிரிவீட்டிலுள்ள வேம்பு என்ற பெண்ணை விட்டு சமைக்கச்சொல்லியுள்ளார். மதிய உணவாக தக்காளி சாதமும், முட்டையும் வழங்கியுள்ளனர்.
    மதிய உணவினை 23 மாணவ மாணவியர்கள் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஆசைத்தம்பி (10) என்ற மாணவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற மாணவ, மாணவியர்களும் வாந்தி எடுத்தனர். இதனால் பொறுப்பு ஆசிரியர் குணமன் மயக்கம் ஏற்பட்ட 12 மாணவர்கள் மற்றும் 11 மாணவிகளை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    உடன் உடையார் பாளையம் ஆர்.டி.ஓ. கருணாகரன், தாசில்தார் திருமாறன் வருவாய் ஆய்வாளர் சம்பத், வி.ஏ.ஓ ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். உணவில் பள்ளி ஏதேனும் விழுந்துள்ளதா? அல்லது வழங்கப்பட்ட முட்டையில் ஏதேனும் குறைபாடா என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

    No comments: