Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 7, 2014

    எளிதாக தேர்வுகளை எதிர்கொள்ள டிப்ஸ்...

    நீங்கள் தேர்விற்கு படிக்கும் போது புத்தகத்தை மட்டும் புரட்டி பார்த்தால், பாடம் நினைவில் நிற்காது. எனவே, படித்த ஒவ்வொன்றையும் எழுதி பார்க்க வேண்டும். படங்கள் வரைந்து, பாகங்களை குறித்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படித்தது மறக்காமல் இருக்கும். 

    நாம் ஒன்றை செய்யும் போது திட்டமிட்டு செய்தால், அது சிறப்பாக அமையும். எனவே, தேர்விற்கு படிப்பதற்கு முன் திட்டமிட்டு படிக்க வேண்டும். உதாரணமாக ஒரு நாளில் எட்டு மணி நேரம் படிக்க திட்டமிட்டால், ஆறு மணி நேரம் படிக்கவும், மீதமுள்ள 2 மணி நேரத்தில் படித்ததை நினைவுபடுத்தி பார்க்க பயன்படுத்த வேண்டும். நாம் திட்டமிட்டபடி இந்த பாடத்தை படித்தோமா என சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்வதால், என்ன படித்தோம், எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம் என ஆராய்ந்து நேரத்தை நிர்வகிக்க முடியும். தேர்விற்கு ஒன்று அல்லது 2 வாரத்திற்கு முன்பே புதிதாக எதையும் படிக்காமல், படித்ததை நினைவு படுத்த வேண்டும். படிக்கும் போது நல்ல முறையில் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும். கவலை மற்றும் அச்சத்துடன் படிக்க கூடாது. மேலும், படிக்கும் போது பாடங்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை தனியாக எழுதி வைத்துக்கொண்டால் ரிவிசன் செய்யும் போது உதவியாக இருக்கும்.
    படிக்கும் போது டிவி பார்ப்பது, பிறருடன் பேசுவதை தவிர்க்கவும். இதற்கு பெற்றோர் உகந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழித்து படிக்காமல் படுக்கைக்கு செல்லவும். அதிகாலை எழுந்து படித்தல் நல்லது. தேர்விற்கு முந்தைய நாள் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை, கைகடிகாரம் என அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேர்விற்கு பழகிய பேனாக்களை பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் வேகம் கிடைக்கும். கையெழுத்து அழகாகவும் இருக்கும். வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு ஆரோக்கியமான காலை உணவை அளவோடு உட்கொள்ள வேண்டும்.

    No comments: