Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 7, 2014

    'மதிப்பெண் சதவீதமாகும்' மாண்புமிகு மாணவர்கள்!

    எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கின்றனர் ஆசிரியர்கள் ,
    குறிப்பாக,
    கிராமத்து பள்ளிகளில்10 மற்றும் +2 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் .
    சுய ஊக்குவித்தலே இல்லாமல்
    " என்னவோ போடா மாதவா !"
    மனநிலையிலேயே தற்போதைய மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர் !
    பத்தாம் ,பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை வகுப்பில் உட்கார வைப்பதே பெரிய சாதனையாக இருக்க, அவர்களின் மனதை பாடத்தில் ஒருமுகப்படுத்துவது இமாலய சாதனையாக இருக்கிறது .

    சட் சட்டென இயல்பு மாறும் பதின் பருவத்தில் இருக்கும் மாணவர்கள், எப்போதும் துரு துருவென எதிர்க்காலத்தைப் பற்றிய கவலையற்ற மனநிலையில் இருப்பது, ஆசிரியர்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கின்றது.
    ஆசிரியர்கள், எப்படியாவது இந்த மாணவர்களை தேர்ச்சி பெற செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யும் ஒவ்வொரு விஷயமும், மாணவர்களிடம் கேலிக்குரியதாக மாறிப்போகிறது.
    இது சற்று வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கு சலிப்பை தருகிறது .
    ஆசிரியர்கள் எவரும் மாணவர்களுக்கு அறிவுரை கூறி தங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை .
    நேரம் கிடைப்பதே பெரிய விஷயமாகி போய் விட்டது,
    எப்படியாவது 75%க்கு மேல் வாங்கி அதிகாரிகளின் கண்டன பேச்சிலிருந்து தப்பி விட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் தற்போதைய கவலை !
    இப்படியொரு மனநிலையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எப்படி நேரத்தை வீணாக்க தோன்றும் ?
    விளைவு !
    நீதி போதனை பாட வேலைகளும் பாட ஆசிரியர்களின் கரங்களில் அடைக்கலமாகிவிட்டன !
    இது தான் தற்போதைய அரசுப்பள்ளிகளின் நிலைமை !
    மெட்ரிக் பள்ளிகளின் நிலைமை?
    சொல்லவே வேண்டாம் !
    பிராய்லர் கோழிகள் வளர்ப்பு தான் !
    ஆசிரியர்களின் மீதான அதிகாரிகளின் வன்முறை வார்த்தை பிரயோகங்கள் மற்றும் கிடுக்கு பிடி செயல்பாடுகள் தளர்ந்து,
    எப்போது அன்பான, ஆரோக்கியமான ,நட்பான , அரவணைப்பான அணுகுமுறை உருவாகிறதோ அப்போது தான் உண்மையான கல்வி நிகழும் !
    நல்ல சமுதாயம் தழைக்கும் !
    இளைய தலை முறையினரை வெறும் மதிப்பெண் அடிப்படையில் பார்த்து ,
    ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால்,
    2%போயிற்று (ஒவ்வொரு மாணவனும் 2%),
    என்று மாண்புமிகு மாணவன் வெறும் மதிப்பெண் சதவீதமாக மாறிப்போய் கிடக்கும் கொடுமையை காண்பதை விட, ஒரு நல்ல ஆசிரியருக்கு ,ஒரு மனசாட்சி உள்ள மனிதருக்கு வேறு பெரிய தண்டனை இருந்து விட முடியாது.
    கட்டுரை எழுதியவர் : திருமதி.D.விஜயலெட்சுமி ராஜா அவர்கள், ஆங்கில ஆசிரியை, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் 

    3 comments:

    Unknown said...

    மாண்புமிகு மாணவன் வெறும் மதிப்பெண் சதவீதமாக மாறிப்போய் கிடக்கும் கொடுமையை காண்பதை விட, ஒரு நல்ல ஆசிரியருக்கு ,ஒரு மனசாட்சி உள்ள மனிதருக்கு வேறு பெரிய தண்டனை இருந்து விட முடியாது.

    SCHOOL TEACHER said...

    Painful fact

    Thirumurugan said...

    விஜி மேடம்..கட்டுரை நன்றாக உள்ளது.ஒவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனநிலையை பிரதிபலிப்பதாய் உள்ளது..