Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 21, 2013

    வகுப்புகளை சரிவர எடுக்காத கணித ஆசிரியர் பணி இடைநீக்கம்

    திட்டக்குடி அருகே, அரசுப் பள்ளி மாணவர்கள் கணிதத் தேர்வைப் புறக்கணித்த விவகாரத்தில், வகுப்புகளை சரிவர எடுக்காத கணித ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கோவிலூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. நடப்புக் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் 22 மாணவர்கள் பயில்கின்றனர். பிளஸ்-1 வகுப்புக்கு கணித பாடம் எடுப்பவர் முதுகலை கணித ஆசிரியர் வரதராஜ். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றலாகி வந்தார்.

    இவர் பள்ளியில் சேர்ந்தது முதல் இதுவரை 10 நாள்கள் மட்டுமே மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளாராம். இதர நாள்கள் விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பிளஸ்-1 மாணவர்களுக்கு கணித பாடம் சரிவர நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடந்த அரையாண்டு கணிதத் தேர்வை மாணவர்கள் புறக்கணித்து பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் வடிவேலு பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அளித்தார்.

    இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் சி.ஜோசப் அந்தோணிராஜ் விசாரணை அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகனுக்கு அனுப்பினார்.

    இயக்குநர் உத்தரவின் பேரில் முதன்மைக் கல்வி அலுவலர், கணித ஆசிரியர் வரதராஜை தாற்காலிக பணிநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

    இதனையடுத்து அந்த பள்ளிக்கு புதிய கணித ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    No comments: