Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 10, 2013

    உடற்கல்வி, ஓவியம், தையல், இசை சிறப்பு ஆசிரியர் பணியிடம் நிரப்ப டிஆர்பி அலுவலகத்தில் முற்றுகை

    உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை டிஆர்பி உடனடியாக நிரப்ப கோரி சிறப்பு ஆசிரியர்கள் நேற்று டிஆர்பி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள டிஆர்பி அலுவலகம் முன் சிறப்பு ஆசிரியர்கள் நேற்று காலை திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதாக அறிவித்து 17 மாதங்கள் ஆகியும் நியமனம் செய்யாததை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.

    இதுகுறித்து அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் ராமர் கூறியதாவது: கடந்த மே 8ம் தேதி டிஆர்பி, அரசாணை 177ன்படி பள்ளிக் கல்வி சிறப்பு விதிகளின் கீழ் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்தது. பதிவு மூப்பு அடிப்படையில் இது நடக்கும் என்றும் தெரிவித்தது. 440 உடற்கல்வி ஆசிரியர்கள், 196 ஓவிய ஆசிரியர்கள், 137 தையல் ஆசிரியர்கள், 9 இசை ஆசிரியர்கள் என மொத்தம் 782 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 17 மாதங்களாகியும் அதற்கான பணியை டிஆர்பி தொடங்கவில்லை. மாநில பதிவு மூப்பு பட்டியல்களை வெளியிட்டு உடனடியாக சான்று சரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தோம்.

    ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பணிகளை முடித்துவிட்டுத்தான் இந்த பணிகளை தொடங்குவோம் என்று டிஆர்பி தலைவர் கூறுகிறார். இதில் முதல்வர் தலையிட்டு சான்று சரிபார்ப்பு தொடங்க உத்தரவிடும்படி மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ராமர் தெரிவித்தார்.முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் டிஆர்பி தலைவர் விபுநய்யார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

    No comments: