Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 20, 2013

    விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு நடப்பதால் சர்ச்சை

    அரசு, தனியார் பள்ளிகளில், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்படுகின்றன. இந்நிலையில், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல, மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தில் முனைப்பு காட்டுகின்றன.
    இதனால், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, காலை, மாலை நேரங்களில் பள்ளி நேரம் தவிர்த்து, கூடுதல் நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட அரசு விடுமுறை நாட்களில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன.

    நேற்று முன்தினம் மாவட்டத்தில், உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட, பல உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    "மாணவ, மாணவியர் மன உளைச்சலில் இருந்து விடுபட்டு, சற்று "ரிலாக்ஸ்" ஆக, இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆசிரியர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அவ்வப்போது விடுமுறைகள் விடப்படுகின்றன. ஆனால், பல பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் "சிறப்பு வகுப்பு" நடப்பது வருத்தம் அளிக்கிறது" என பல ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கூறினர்.

    இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளியிடம் கேட்ட போது, "விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது, பள்ளி நிர்வாகங்கள் எடுக்கும் முடிவு; பெற்றோரின் ஆட்சேபனையின்றி அவர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர். இருப்பினும், இது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மழைக் காலங்களில், பாதுகாப்பு நடவடிக்கை கருதி, இத்தகைய சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது என்ற கண்டிப்பான அறிவுரையை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளோம்" என்றார்.

    1 comment:

    Anonymous said...

    தீபாவளி பண்டிகை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடந்தால் மாவட்ட கல்வி அதிகாரி அனுமதிப்பாரா?