Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 20, 2013

    "சில்மிஷ' ஆசிரியர், ஆசிரியை "சஸ்பெண்ட்' : தமிழக கல்வி துறை அதிரடி நடவடிக்கை

    ஆத்தூர் அருகே, வீரகனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியரிடம், 'சில்மிஷ'த்தில் ஈடுபட்ட ஆசிரியர், ஆசிரியை இருவரையும், நேற்று, தமிழக கல்வித் துறை, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டு உள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வீரகனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர்
    கிருஷ்ணகுமார், உடற்கல்வி ஆசிரியை வாசுகி ஆகிய இருவரும், சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன், மாணவியரிடம் தகாத முறையில் பேசி வந்தனர். இவர்கள் மீது, ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்த நிலையில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், கிருஷ்ணகுமாரை, லத்துவாடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், வாசுகியை, செந்தாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும், பணிமாறுதல் செய்து உத்தரவிட்டார். "பெயரளவில்' நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து, "தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தமிழக பள்ளிக்கல்வித் துறை, இணை இயக்குனரும், என்.எஸ்.எஸ்., திட்ட இயக்குனருமான உமாராணி தலைமையிலான அதிகாரிகள், 16ம் தேதி, காலை, 11:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவியரிடம், தனித் தனியாக விசாரணை நடத்தினர். அன்று இரவு, 8:00 மணியளவில், ஆசிரியர்கள் மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கை விவரங்களை, தமிழக பள்ளிக்கல்வித் துறை, இயக்குனருக்கு, "ரகசிய விசாரணை அறிக்கை' என, அனுப்பப்பட்டது. சில்மிஷ புகாரில் சிக்கிய ஆசிரியர் கிருஷ்ணகுமார், ஆசிரியை வாசுகி ஆகிய இருவரையும், "சஸ்பெண்ட்' செய்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், நேற்று உத்தரவிட்டார். ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை, அவர்களது வீட்டில் வழங்கும்படியும், அவர்கள் இல்லையெனில், வீட்டின் கதவில் ஒட்டி வரும்படியும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    No comments: