Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 1, 2013

    7ம் வகுப்பு மாணவிக்கு லவ் லெட்டர் எழுதிய வாத்தியார்: புரியாததால் வகுப்பாசிரியையிடம் காட்டிய மாணவி

    நாகை மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 7ம் வகுப்பு மாணவிக்கு நூதனமுறையில் காதல் கடிதம் எழுதி கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமருகல் – ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பால்மோகன். இவர் அதே பள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்என்பது குற்றச்சாட்டு.

    இந்த ஆசிரியர் கடிதம் எழுதிய முறையே வித்தியாசமாக் இருந்தது. அதாவது நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதை அப்படியே தமிழில் சொல்லாமல், naan unnai kadalikkiren என்று சொல்வது போல தமிழை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்துள்ளார். அந்த மாணவிக்கு வாத்தியார் எழுதியது புரியாமல் அதை தனது வகுப்பு ஆசிரியரிடம் காண்பிக்கவே அதனை படித்த வகுப்பு ஆசிரியர் ஷாக் ஆகி, தலைமை ஆசிரியரிடம் கொண்டு போய் கொடுத்து புகார் அளித்துள்ளார்.

    இதை அடுத்து அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிவேலு ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    பள்ளி ஆசிரியர் ஒருவர் 14 வயது மாணவிக்கு நூதன முறையில் காதல் கடிதம் எழுதிய சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments: