Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 1, 2013

    குரூப்-2: 1,064 பணியிடங்களுக்கு 6.64 லட்சம் பேர் போட்டி

    வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல ஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064 பணியிடங்களுக்கு இன்று குரூப்-2 எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

    காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை மாநிலம் முழுவதும் 2,269 மையங்களில் குரூப்-2 தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 79 ஆயிரத்து 550 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 263 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று நடைபெறவுள்ள முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பிரதானத் தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவர். அதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும். தேர்வுகளை கண்காணிக்க 2 ஆயிரத்து 269 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வுக் கூடத்துக்கு அனுமதிக்கப்பட்ட பேனா தவிர, புத்தகம், குறிப்புகள், பேஜர், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கருவிகள், பதிவு கருவிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லக் கூடாது.

    அனைத்து மையங்களிலும், தேர்வுப் பணியை வீடியோ பதிவு செய்ய டி.என்.பி.எஸ்.சி., ஏற்பாடு செய்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்ட பின், நடக்கும் முதல் குரூப்-2 தேர்வு இது தான். குரூப்-1 தேர்வுக்கு அடுத்து, மிகவும் முக்கிய தேர்வாக, குரூப்-2 உள்ளது. இவ்வாறு, விஜயகுமார் தெரிவித்தார்.

    ஜெனரல் ஸ்டடிஸ் பகுதியில் 75 கேள்விகள்; திறன் அறிதல் பகுதியில் 25 கேள்விகள்; பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும், தலா, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கிறது.

    No comments: