உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற முடியும். இதனடிப்படையில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவரின் பெயர், மீண்டும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலிலும் இடம் பெறும்.
தற்போது 2013 ஜனவரி 1 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடம் முதுகலை ஆசிரியராக விருப்பமா அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக விருப்பமா என கடிதம் பெற பள்ளி கல்வித்துறை திடீர் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களின் விருப்பத்தை பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் சீனியாரிட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடம் விருப்ப கடிதம் கேட்டு நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் கோவிந்தராஜு, உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சேதுச்செல்வம் ஆகியோர் கூறுகையில், 'முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் சென்ற பட்டதாரி ஆசிரியர், விருப்பத்தின் அடிப்படையில் மீண்டும் உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும். கல்வித்துறையின் புது நிபந்தனையால் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது. இது எங்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்' என்றனர்.
2 comments:
பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு ஒர் வேண்டுகோள்
1. விருப்பக் கடிதம் கேட்கும் பள்ளிக் கல்வித்துறை பேணல் தயாரிக்கும் போதே அதாவது 01.01.2013 அன்றே இந்த திட்டத்தை கூறியிருக்க வேண்டும். அல்லது கல்வியாண்டு துவக்கத்திலேயே இதனை வலியுறுத்தி செயல்முறைகள் வெளியிட்டிருக்க வேண்டும்.
2. வெகு காலதாமதமாக வெளியிட்டிருப்பதால் பட்டதாரி ஆசிரியர்கள் வெகு பாதிப்புக்குள்ளாயிருக்கிறார்கள்.
3. பதவியுயர்வில் சென்று விடலாம் என்ற காரணத்தால் ஆசிரியர் பொது மாறுதல் கலந்ாய்விற்கு கூட விண்ணப்பிக்கவி்ல்லை. இவர்கள் நிலை என்ன?
4. தற்காலிகமாக பதிவியுயர்வை துறந்தவர்கள் நிலை என்ன?
5. ஒரு வருடத்தில் போட்டித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி ஒன்றாக இருக்க வேண்டும். எங்களுக்கு முந்தயவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தாங்கள் எங்க
ளுக்கு மறுப்பது நியாமற்றது.
6. ஒரே வருடத்தில் டிஆர்பியால் தேர்வு செய்யப்பட்டவர்களில் பாதி பேர்க்கு இவ்வாய்ப்பை வழங்கி மீதி பேருக்கு வாய்ப்பை மறுப்பது தகாத செயலாகும்.
7. இதன் பொருட்டு அய்யா அவர்கள்் இந்த வருடம் விருப்பக் கடிதம் கேட்கும் திட்டத்தினை கைவிட வேண்டும்.
இரண்டு பதவியையும் நீங்களே அனுபவித்தால் எப்படி? ஒன்றை விட்டுக் கொடுத்தால் அதற்கு அடுத்த சீனியாரிட்டியிலுள்ள நாங்கள் எடுத்துக் கொள்வோமே? நாங்களும் பட்டதாரியாசிரியர்கள்தானே?
Post a Comment