Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 23, 2013

    பள்ளிக் கல்வித்துறை குளறுபடி: பதவி உயர்வு பாதிப்பில் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி

    பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்கும் அபாயம் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலாகிறது. இதற்காக கருத்தாளர்கள், பாடம் வாரியான ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கருத்தாளர்களுக்கான பயிற்சி மே18ல் முடிந்த நிலையில், மே 29,30,31ல் பாட வாரியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது.
    ஆனால்,மே 30,31ல் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான அரசுத்துறை தேர்வு (டிபார்ட்மெண்ட்) நடக்கிறது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஏராளாமான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அரசுத்துறை தேர்வு அட்டவணையை பரிசீலிக்காமல், அதே தேதியில் முப்பருவ கல்வி முறை குறித்த பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என, அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

    ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், "பெரும்பாலான ஆசிரியர்கள் துறைத்தேர்வு எழுதி பதவி உயர்வு பெறுகின்றனர். மே30 ல் சார்புநிலை அலுவலர் கணக்கு தேர்வும், 31ல் தமிழ்நாடு அலுவலர் நடைமுறைகள் தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் எழுத முடியாது.

    பொதுவாக விடுமுறை காலத்தில் ஆசிரியர்களுக்கு எவ்வித பயிற்சியும் கூடாது என்றாலும், பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் ஏராளாமான ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. முப்பருவ முறை பயிற்சியை தள்ளி வைக்க வேண்டும்" என்றனர்.

    No comments: