Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 23, 2013

    அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்களுக்கு உதவும் தகவல் மையம் தொடக்கம்

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கை குறித்த விபரங்களை அறிந்து கொள்ள உதவும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    நிதி நெருக்கடி மற்றும் நிதி முறைகேட்டில் சிக்கிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழகஅரசால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.2013-14 கல்வி ஆண்டிற்கான பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி சேர்க்கை நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படவுள்ளது. நுழைவுத்தேர்வுகள் ஜூன் 7,8,9 தேதிகளில் தமிழகத்தில் 7 மையங்களில் நடத்தப்படுகிறது.இந்நிலையில் மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பங்கள் பெறுவது குறித்தும் அறிந்து கொள்ளவும் பல்கலைக்கழக நிர்வாகி உத்தரவின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட அலுவலகத்தில் கே பிரிவு அலுவலகம் அருகே தகவல் உதவி மையம் (MAY I HELP YOU) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வெளியூரில் உள்ள மாணவர்கள் விவரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மையத் தொலைபேசி எண்கள்: 04144- 238348, 238349.

    No comments: