Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 16, 2013

    அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்டம் நிறைவேற்றம்

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வகைசெய்யும் சட்டமசோதா, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
    தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முக்கியமானது. கடந்த 1929ம் ஆண்டில் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. தமிழகத்தின் பெரிய பல்கலைக்கழகமாகவும் இது விளங்கியது.

    ஆனால், சமீப ஆண்டுகளில், இப்பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேடுகளால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை சரிசெய்ய அரசு சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், பல்கலையை அரசே ஏற்று நடத்த முடிவுசெய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

    அதன்படி, மே 16ம் தேதி, உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், அதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: கடும் நிதி நெருக்கடி காரணமாக, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தனியார் நிர்வாகத்தால் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஆசிரியர் - மாணவர்கள் நலன் கருதி, இப்பல்கலையை அரசே ஏற்று நடத்த முடிவுசெய்து, அதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்றார்.

    பின்னர், இதுதொடர்பான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு, இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், பல்லாண்டுகள் பழமைவாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

    No comments: