Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 25, 2013

    தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ

    "தமிழகத்தில், புதிதாக, 17 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன" என ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா கூறினார். ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


    இந்திய தொழிற்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியன இணைந்து, "தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான செயல்பாடுகள்" என்ற தலைப்பில், மண்டல அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கை, சென்னை, சி.எல்.ஆர்.ஐ., நிறுவனத்தில், நேற்று துவக்கின.

    கருத்தரங்கை துவக்கி வைத்து, மான்தா பேசியதாவது: தொழிற்துறையும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால், தொழில்நுட்பக் கல்வியின் தரம் மேம்படுவதுடன், மாணவர்கள், படிப்பை முடித்ததும், உடனுக்குடன், வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழலும் உருவாகும்.

    ஆனால், இரு துறைகளுக்கும் இடையே, பெரும் இடைவெளி இருக்கிறது. இதை, சரி செய்ய வேண்டும்.பொது துறை நிறுவனங்கள் பயிற்சிமேலும், பொதுத் துறை நிறுவனங்கள் சார்பில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் துவக்கி உள்ளோம்.

    முதற்கட்டமாக, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்துடன், சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 43 பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள், அனைத்து நவீன வசதிகளைக் கொண்டவை.தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த மாணவர்களுக்கு, இந்த மையங்களில் பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். 400 மணி நேரம், இந்த பயிற்சி அளிக்கப்படும்.

    இதற்காக, மாணவர்கள், கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏ.ஐ.சி.டி.இ., சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு, நிதியை வழங்கும். அந்நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு வழங்கும். இவ்வாறு மான்தா பேசினார்.

    பின், நிருபர்களிடம், மான்தா கூறியதாவது: தமிழகத்தில், 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எட்டு பொறியியல் கல்லூரிகள், தாமாகவே முன்வந்து, மூடி விடுவதாக தெரிவித்துள்ளன.

    தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த, என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என, அனைத்து மாநிலங்களுக்கும், கடிதம் எழுதினோம். மகாராஷ்டிரா மட்டும், பதில் அளித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட, வேறு எந்த மாநிலங்களும், உயர்கல்வியின் தர மேம்பாடு குறித்து, பதில் அளிக்கவில்லை. இவ்வாறு மான்தா கூறினார்.

    தமிழகத்தில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில், 1.30 லட்சம் இடங்களே, ஆண்டுதோறும் சராசரியாக நிரம்புகின்றன. மீதம் உள்ளவற்றில், மாணவர்கள் சேர்வதில்லை.

    இந்நிலையில், 17 பொறியியல் கல்லூரிகளை, புதிதாகத் துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப, இடங்கள் நிரம்பும் என்ற நிலையில், கல்லூரி ஒன்றுக்கு, தற்போதைய நிலவரப்படி, மூன்றில் ஒரு பங்கு இடங்கள், காலியாகவே இருக்கின்றன.

    புதிதாகத் துவக்கப்படும் கல்லூரிகளிலும், இதே நிலை காணப்படும்.இந்த நிலையைத் தவிர்த்து, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில், இடங்களை நிரப்ப, மாநில அரசு ஆவன செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.



    No comments: