Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 21, 2013

    100 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

    நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 100 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி வீதம் கணிசமாக உயர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
    இந்த ஆண்டில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் அரசு பள்ளிகளின் மாணவர்களின் தேர்ச்சி நிலை குறித்து தெரிந்துகொள்ள பள்ளி கல்வித்துறை சர்வே நடத்தியது. அதன்படி இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி கடந்த 3 ஆண்டுகளை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
    பள்ளிக் கல்வித் துறை நடத்திய சர்வேயில் தெரியவந்த விவரங்கள்:

    * கடந்த 3 ஆண்டுகளாக கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர், திருவாரூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் தங்களின் தேர்ச்சி வீதத்தை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன.
    * கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக் கோட்டை, திருநெல்வேலி, தர்மபுரி, திருவாரூர், வேலூர், தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி, திருவாரூர், சிவகங்கை, சேலம், நாமக் கல், தருமபுரி, சென்னை ஆகிய 27 மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.
    *பிளஸ் 2 தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தோர் 42 சதவீதம். 2 பாடத்தில் தோல்வியுற்றோர் 35 சதவீதம்.
    * இரண்டுக்கும் மேற்பட்ட பாடங்களில் 23 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
    * கடந்த 3 ஆண்டில் மாணவர்களின் மொத்த தேர்ச்சி வீதம் 86 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீதம் உயர்ந்துள்ளது.
    * மாணவர்களைவிட மாணவியர் 7 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    * அனைத்து வகை பள்ளிகளை பொறுத்தவரை 2011ல் 892 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி இருந்தது. 2013ல் அது 1117 ஆக உயர்ந்துள்ளது.
    * 2011ல் 35 அரசுப் பள்ளிகளில் மட்டுமே 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2013ல் 100 அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல 2011ஐவிட எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களின் தேர்ச்சி வீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    No comments: