Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 17, 2013

    குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்

    "டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-1 முதன்மைத் தேர்வில், 1,330 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு பெற்றவர்கள், தகுதிச் சான்றிதழ்களை, தபால் மூலமாகவோ, தேர்வாணைய இணையதளத்திலோ, ஜூன், 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்" என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
    இதுகுறித்து, நிருபர்களிடம்நேற்று அவர் கூறியதாவது: துணை ஆட்சியர் - 8, காவல் துறை கண்காணிப்பாளர் - 4, உதவி ஆணையர் (வணிக வரி) - 7, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் - 1 உள்ளிட்ட, 25 காலிப் பணியிடங்களுக்கு, பிப்., 16ம் தேதி தேர்வு நடந்தது. இந்த குரூப்-1 முதன்மைத் தேர்வை, 75,629 பேர் எழுதினர். இதில், 1,330 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

    தேர்வு பெற்றவர்கள், தபால் மூலமாகவோ, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலோ, வயது, கல்வி உள்ளிட்ட தகுதி சான்றிதழ்களை, ஜூன், 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தகுதி சான்றிதழ்களை பதிவு செய்யாதவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்.

    சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இறுதிப் பட்டியலில் உள்ளவர்கள், அடுத்த முதன்மை எழுத்துத் தேர்வு, நேரடி தேர்வில் கலந்து கொள்வர். முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, நவநீத கிருஷ்ணன் கூறினார்.

    No comments: