Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 5, 2012

    பார்வையற்றோர் அரசுப் பள்ளியில் சேர்க்கை தொடக்கம்.

    சேலம் பார்வையற்றோர் அரசு நடுநிலைப் பள்ளியில் நிகழாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியை அ.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
     சேலம் மாநகர் செவ்வாய்ப்பேட்டை பங்களாத் தெருவில், பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, தங்கும் விடுதியுடன் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 5 வயது முதல் பார்வையற்ற ஆண், பெண் குழந்தைகள் இலவசமாக சேர்த்துக் கொள்ளப்பட்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், இசையும் கற்றுத்தரப்படுகிறது.
     இவர்களுக்கான உணவு, உடை, கல்வி அனைத்தும் அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில அரசே சலுகை அடிப்படையில் பல்வேறு வேலை வாய்ப்பினையும் சுயதொழில் செய்வதற்கான உதவிகளையும் செய்து வருகிறது.
     எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பார்வையற்ற குழந்தைகளை பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பார்வையற்ற அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்து அவர்கள் பயனடைய வழிவகை செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: