தமிழகத்திலுள்ள 30 அரசு பாலிடெக்னிக்குகளில் 10-ம் வகுப்பு படித்தவர்கள்
150 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், கீழே உள்ள நமது இணையதள இணைப்பிலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் 8-ம் தேதி
மாலை 5.45 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின்
வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு
ஒதுக்கீட்டின் கீழ்
விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் அரசு தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக்கில் தலா 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் அரசு தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக்கில் தலா 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment