Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 2, 2012

    ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் - அதிக என்ணிக்கையில் உள்ள குறிப்பிட்ட பாட ஆசிரியர் மாறுதலுக்கு பின்னரே, பொது மாறுதல்.

    அரசு பள்ளிகளில், குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பதால், அவர்களை மாறுதல் செய்த பிறகே, ஆசிரியர் பொது மாறுதல், கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவேதான், விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    இடமாறுதல் "கவுன்சிலிங்" அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மே, ஜூன் மாதங்களில், பொது பணியிட மாறுதல், "கவுன்சிலிங்" நடத்தப்படும். இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, பின் ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்பட்டு, பொது மாறுதல் "கவுன்சிலிங்" நடத்தப்படும்.

    "கவுன்சிலிங்" நடைபெறும் நாளன்று காலையில், காலியிட பட்டியல் வெளியிடப்படும். அப்போது, பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து, உத்தரவுகள் வழங்கப்படும்.
    நடப்பாண்டு கவுன்சிலிங்கிற்காக, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில், தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆகிய இரு துறைகளிலும், கடந்த சில தினங்களாக விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளது.
    காரணம் என்ன?
    இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரு துறை சார்ந்த பள்ளிகளிலும், குறிப்பிட்ட சில பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்துப் பாட ஆசிரியர்களும், சம எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இந்த குறையை சரிசெய்யாமல், "கவுன்சிலிங்" நடத்தினால் பிரச்னை ஏற்படும்.
    எனவே, முதலில் எந்தெந்த பள்ளிகளில், ஒரே பாட ஆசிரியர்கள் அதிகளவில் இருக்கின்றனரோ, அவர்களை, தேவையான வேறு பள்ளிகளுக்கு மாற்றி, அதன்பின் ஆசிரியர் மாறுதல் "கவுன்சிலிங்" நடத்தலாம் என, அரசு கருதியுள்ளது.
    மே இறுதியிலோ அல்லது ஜூன் 15 தேதிக்குள், பொது மாறுதல் "கவுன்சிலிங்" நடைபெறும். அரசாணை வெளிவந்ததும், "கவுன்சிலிங்" தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். 
    courtesy : dinamalar.

    No comments: