ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம் !!!இன்று 12.11.2014 வரும் என எதிர்பார்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு எண் -10546 விசாரணைக்கு எட்டவில்லை. மீண்டும் அடுத்த வாரம் புதன்கிழமை விசாரணை பட்டியலில் இடம் பெறும் ,ஏன் இந்த தாமதம் ??
தற்போது உள்ள நீதிமன்ற நடைமுறை முதலில் வார பட்டியலில் (weekly list) இடம் பெற வேண்டும் ,பின்னர் அதில் ஒவ்வொரு வாரம் விசாரணை முடியும் வழக்கு போக மீதம் உள்ள வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் இதுதான் நடைமுறை இதை மாற்ற முடியாது .. எதற்காக காத்திருக்கிறது SSTA ?? வழக்கில் எங்களுக்கு அரசை பரிசீலனை செய்து (CONSIDER )என்று ஆணை பெற வேண்டும் என்றால் ஒரே வாரத்தில் பெறலாம் ,அதை கொண்டு எதுவும் செய்ய முடியாது. அரசு ஏதேனும் ஓர் காரணம் ௯றி மறுத்துவிட்டால் மீண்டும் ஒருநபர் நீதி மன்றத்தில் புதிய வழக்கு தொடுக்க வேண்டும் .இது தேவை இல்லாத ஒன்று . அரசிடம் பதில்(counder File ) மனு பெற்று வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த ஊதியத்தில் நிர்ணயம் செய்யுங்கள் என்ற ஆணை பெற்றால் தான் ஊதியம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் , இல்லாவிட்டால் இப்போது வரும் ஐனவரி மாதம் வரும் ,பிப்ரவரியில் வரும் என்று காலண்டரை பார்த்து கொண்டிருக்க வேண்டியது தான் ,அரசின் பதில் மனுவை ஒரு முறை பெற்றுவிட்டால் அதனை கொண்டு உச்ச நீதி மன்றம் வரை சென்று மேல் முறையீடு செய்து வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்.எப்படி ஆகிலும் SSTA இழந்த இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை பெற்றே தீரும்!!! நீதி மன்றத்தில் காலதாமதம் தவிர்க்க முடியாதது .முழு விபரம் வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்யப்படும்.
No comments:
Post a Comment