Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 3, 2014

    இரவில் "டிவி'யை ஆனில் வைத்தால் மின் இழப்பு ; விழிப்பு வழங்கும் மின்வாரியம்


    வீட்டில் இரவு முழுவதும் "டிவி' யை ஆனில் வைத்திருந்தால் நாள் ஒன்றுக்கு 10 வாட்ஸ் மின்சாரம் இழப்பாகும், என, மின்பயனீட்டாளர்களுக்கு மின்வாரியத்தினர் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

    காரைக்குடியில் பள்ளி மாணவர்களுக்கான மின் சிக்கனம், பாதுகாப்பு, மின் திருட்டு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மின்வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பேசுகையில், மழை நேரம் நெருங்கியுள்ளதால், மாணவர்கள் மின்கம்பம் அறுந்து விழுந்தால், மின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவேண்டும். மழை நேரங்களில் மின்கம்பங்களுக்கு அருகே செல்லக்கூடாது. மின்சாரத்தை விதிகளை மீறி யாரேனும், கொக்கி போட்டு திருடினால் தெரிவிக்கலாம். மொபைல் சார்ஜர்களை இரவு முழுவதும் ஆனில் வைத்திருக்க கூடாது. அதேபோன்று இரவில் "டிவி'யை ரிமோட்டில் ஆப் செய்துவிட்டு தூங்கினால் நாள் ஒன்றிற்கு 10 வாட்ஸ் மின்சார இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் 20 யூனிட் மின்சாரம் கவனக்குறைவால் இழப்பு ஏற்படுகிறது.
    குறைந்த மின்சாரத்தில் அதிக ஒளி தரும் சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்த வேண்டும். ஒரு யூனிட் மின் சேமிப்பு, இரண்டு யூனிட் உற்பத்திக்கு சமம். அவ்வை அன்று போதித்தது பொது சிக்கனம், நமக்கு இன்று தேவை மின்சிக்கனம், என பேசினார். எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தாய், உதவி பொறியாளர் முத்துராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

    No comments: