பெங்களூரு இந்திரா நகர், கேம்பிரிட்ஜ் ஆங்கிலப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்த மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, பள்ளி மூடப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு சென்ட்ரல் லோக்சபா எம்.பி., மோகன், எம்.எல்.ஏ., ரகு, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ரெட்டி உட்பட கல்வி துறை உயர் அதிகாரிகள் தலைமையில், பெற்றோர் கூட்டம் நேற்று நடந்தது.
இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், பிள்ளைகளின் பாதுகாப்புக்காக, மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. ’பள்ளியில், 90 ’சிசிடிவி’ கேமரா பொருத்தி, பிள்ளைகளின் பாதுகாப்புக்கு, அனைத்து நடவடிக்கைகளையும் கல்வி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
பெற்றோர் பயப்பட தேவையில்லை’ என, நகர போலீஸ் கமிஷனர் ரெட்டி, நம்பிக்கை அளித்ததால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.
பலத்த பாதுகாப்புக்கிடையில், பள்ளி மீண்டும் திறக்கப்படும். பெற்றோர், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு பள்ளியை திறக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment