தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நவ. 13ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்ககப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: மழை காரணமாக சென்னை பல்கலைகழகத்தில் இன்று (நவ. 13ம் தேதி) நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அண்ணா பல்கலைகழகத்தில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment