ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகார பிரச்னையில, நாலு பேரை, அதிரடியா வெவ்வேற இடங்களுக்கு துாக்கி அடிச்சிட்டாங்க பா...'' என்றபடி, பெஞ்ச் விவாதத்தைத் துவக்கினார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ''பள்ளி கல்வித் துறையில, அமைச்சர் ஆசிர்வாதத்தோட சில பேர், ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரங்களை பார்த்துட்டு இருந்தாங்க பா... ஒரு கட்டத்துல, ஒரு கும்பலோட ஆதிக்கம் அதிகமானதுல, அதிகாரிகளுக்கே, கோபம், தலைக்கு ஏறிடுச்சு... ஆனாலும், மேலிடத்து விவகாரம்ங்கறதால, அமைதியா இருந்துட்டாங்க...
''இந்த விஷயம் சமீபத்துல, முதன்மை செயலர் சபிதா கவனத்துக்கு வந்ததும், அதிகாரிகளை அழைச்சு, 'எல்லாத்துக்கும் தலையை ஆட்டிட்டு, அமைதியா இருப்பீங்களா...'ன்னு, சத்தம் போட்டுருக்காங்க...
''இந்நிலையில, பள்ளி கல்வித்துறையில, டிரான்ஸ்பர் பணிகளை கவனிச்ச நாலு பேரை, திடீர்னு, வெவ்வேற இடத்துக்கு மாத்திட்டாங்க... 'மேலிடத்து வேலையை செஞ்சதுக்கு, நம்மளை பலிகடா ஆக்கிட்டாங்களே'ன்னு, நாலு பேரும் புலம்பிட்டு இருக்கறாங்க பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.
1 comment:
TET தேர்வு பற்றி அறிவிப்பு எப்போது ?
அரசு உதவி பெரும் கல்வி நிறுவங்களில், TET பாஸ் செய்தல் தான் சம்பளம்.. என்ற நிலையில், பலாயிரம் ஆசிரியர்...சம்பளமின்றி ..தவிக்க
ஆண்டுக்கு ஒரு முறை - கண்டிப்பாக TET தேர்வு நடத்த வேண்டும்.. என்று RULE இருந்தும் ..அதை கண்டு கொள்ளாமல் ..15 மாதமாக தேர்வு நடத்தவில்லை
TET தேர்வு நடத்துவதை தீர்மானிக்கும்-அரசு அதிகாரிகள்- அதை (TET ) நடத்தாமல் காலதாமதம் செய்வது...GOVT சம்பளம் பெற்று கொண்டு ..வேலை செய்யாமல் இருபதற்கு சமம்.
அது அவர்கள் கடமை. இங்கே
கடமை தவறுகிறார்கள்.
இதை சரி செய்ய COURT தான் உள்ளது. அனைத்து விசயத்திற்கும் கோர்ட் தான் முடிவு என்றால்.. இந்த அதிகார்கள் எதற்கு ? அவர்களுக்கு சம்பளம் ஒரு கேடா?
பிறகு ஏன்.. 2000+ வழுக்குகள், கல்வி துறை மீது வராது?
தவறான வகைகளில் TRANSFER மூலம் கல்லா கட்ட நினைக்கும் மந்திரி ..கொஞ்சம் எந்திரித்து வேலை பார்க்கவும்
எதிர் கட்சிகள் "செயல் படா அரசு " என்று விமர்சியதில் என்ன தவறு?
சிந்திபீர் !
Post a Comment