Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 18, 2014

    மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேன்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தவேண்டும் போலீசார் கண்டிப்பான உத்தரவு

    சென்னையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    ஆலோசனை கூட்டம்
    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
    கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர்கள் அருண், ஸ்ரீதர் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். சுமார் 400 பள்ளிகளின் சார்பில் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் தரப்பில் கண்டிப்பான உத்தரவுகள், பிறப்பிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:–
    ஜி.பி.எஸ். கருவிகள்
    * பள்ளி வளாகத்திலும், பள்ளிக்கு வெளியே வாசலிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பொருத்தப்படும் கேமராக்கள், தெளிவாக படம் பிடிப்பனவாக இருக்க வேண்டும்.
    * மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேன்கள் மற்றும் பஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விவரங்களை புகைப்படத்துடன் சேகரித்து வைத்திருக்கவேண்டும். தனியாக வேன்களில் மாணவ–மாணவிகளை அனுப்பி வைக்கும் பெற்றோர், மேற்படி வேன்களின் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
    * பள்ளி வேன்–பஸ்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தி இருக்க வேண்டும்.
    * மாணவ–மாணவிகளை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு, அந்தந்த பள்ளி நிர்வாகத்துக்கு உள்ளது. பெற்றோரும், தங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பி வரும் வரை, உரிய கண்காணிப்புடன் இருக்க வேண்டும். மேற்கண்டவாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
    வேகத்தடுப்புகள்
    பள்ளிகள் செயல்படும் சாலைகளில், உரிய வேகத்தடைகளை அமைப்பது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவும், ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    அடுத்த மாதம் மீண்டும், இதுபோன்ற ஆலோசனை கூட்டத்தை நடத்திடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    No comments: