Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 13, 2014

    அனுமதியில்லாமல் இயங்கும் அமைச்சரின் பள்ளிகள்; பொது உத்தரவு துறை நோட்டீஸ்

    கர்நாடக அரசு அனுமதி பெறாமல், பெங்களூருவில், 15 கிளைகளுடன் இயங்கும், ஆந்திர மாநில அமைச்சருக்கு சொந்தமான, ’நாராயணா இ-டெக்னோ’ பள்ளிகளுக்கு, பொது உத்தரவு துறை, ’நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

    முறைகேடு: பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்தபோது, பெங்களூருவில், பல பள்ளிகள் முறைகேடாக இயங்குவது தெரியவந்தது. அனைத்து பள்ளிகளை பற்றி தகவல் திரட்டப்பட்டது. அப்போது, பெங்களூருவில் மட்டும், 15 கிளைகளை கொண்டுள்ள, ’நாராயணா இ-டெக்னோ’ பள்ளிகள், ஆந்திர மாநில முனிசிபல் நிர்வாகம் மற்றும் நகர திட்டத் துறை அமைச்சர் நாராயணாவுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.

    இப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை, கன்னடம் முதல் பாடமாக எடுத்து நடத்தப்படும் என, அனுமதி பெற்று, ஆங்கிலத்தை முதல் பாடமாக வைத்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துடன், பிளஸ் 2 வரை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    வட்டார கல்வி அதிகாரி முனி ரெட்டி, தன் எல்லைக்கு உட்பட்ட, கோரமங்களா, ஹொன்னசந்திரா, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் இயங்கி வந்த, நாராயணா இ-டெக்னோ பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஒரு வாரத்திற்குள்...: அரசு விதிமுறைகளை மீறி இயங்கும் இப்பள்ளிகள் ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்காவிட்டால், பள்ளி நிர்வாகம் மீது, கிரிமினல் வழக்கு தொடரப்படும் என, பொதுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி இணையதள தகவலின்படி, ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள, நாராயண இ-டெக்னோ பள்ளி நிர்வாகத்துக்கு, ஐதராபாத்தில், 35 பள்ளிகள் இருப்பதாகவும், ஆந்திரா முழுவதும், 130 பள்ளிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.


    பெங்களூருவில் 15, சென்னையில் மூன்று, புவனேஸ்வரில் ஒன்று என, ஐந்து மாநிலங்களில் மொத்தம், 184 பள்ளிகளை நடத்தி வருவதும் தெரிய வந்தது. பத்திரிகைகளில், தகவல்கள் வெளியானதிலிருந்து, இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பெற்றோர் தவிப்பில் உள்ளனர்.

    சிலர், பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று, அரசு அங்கீகாரம் பெற்ற அத்தாட்சிகளை காட்டும்படி கேட்டதற்கு, அவர்கள் எதுவும் பதிலளிக்காததால், இப்பள்ளிகள் அனைத்துமே முறைகேடாக நடத்துவது உறுதியானது. நடவடிக்கை

    இப்பள்ளிகளில் முறையாக பாடம் கற்றுத் தரப்படுவதில்லை என்பதுடன், கட்டணமும் அளவுக்கு அதிகமாக வசூலித்து வருகின்றனர் என்ற புகாரும் எழுந்துள்ளது. பொது உத்தரவு துறை எடுத்துள்ள நடவடிக்கைக்கு பின், இப்பள்ளிகள் மீது, அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

    No comments: