Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 18, 2014

    3100ம் ஆண்டு வரை தேதிக்கு கிழமை சொல்லும் சிறுவன் : அதிசயிக்கின்றனர் பெற்றோர், ஆசிரியர்கள்


    கொளப்பாக்கத்தை சேர்ந்த சேசுராம் என்ற 10 வயது சிறுவன், மொத்தம், 1090 ஆண்டுகளில் ஏதாவது ஒரு தேதியை (3,97,850 நாட்கள்) கூறி, கிழமை கேட்டால், மறு நொடியே, சம்பந்தப்பட்ட தேதிக்கான கிழமையை கூறுகிறான்.
    அவனுடைய தனித்திறமை குறித்து, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் பிரமிப்படைகின்றனர். ஆனால், சேசுராமுக்குள் ஒளிந்திருந்த இந்த திறமை, எப்படி உருவானது என, அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    என்ன நடந்தது?சேசுராமுக்கே அவனது திறமை குறித்து கேட்டால், தெரியவில்லை. 'தெரியும்' என்று மட்டுமே கூறுகிறான். 
    மகனின் திறமை குறித்து, தந்தை கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:நான் ஒரு தனியார் நிறுவன ஊழியர். கடந்த, ஏப்ரல் மாதம் பள்ளி கோடை விடுமுறையில், சொந்த ஊரான ஈரோட்டிற்கு குடும்பத்துடன் செல்ல வேண்டி இருந்தது. சேசுராமை அழைத்துக்கொண்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றேன். நான் கேட்ட தேதியில், டிக்கெட் இல்லை என்பதால், 20 நாட்களுக்கு பின், ஒரு தேதியில் டிக்கெட் இருப்பதாக, முன்பதிவாளர் கூறினார்.அன்றைய தேதி என்ன கிழமை என, தெரிந்துகொள்ள அலைபேசியில், தேட முயன்றேன். அதற்குள், சேசுராம், கிழமையை கூறிவிட்டான். ஆச்சரியப்பட்டேன்.அடுத்த வாரத்தில் உள்ள குறிப்பிட்ட தேதியின் கிழமையை கூறவே, ஒரு நிமிடமாவது கணக்கு போட வேண்டும். ௨௦ நாளுக்கு பின் உள்ள தேதியின் கிழமையை மறுநொடியே அவன் கூறியதும், அவனுக்குள் எதோ ஒரு திறமை ஒளிந்திருக்கிறது என, தெரிந்து கொண்டோம்.பிறகு, ஒவ்வொரு ஆண்டு வாரியாக தேதிக்கு கிழமை கேட்டோம். 2010 முதல் 3100ம் ஆண்டு வரை உள்ள, ஏதாவது ஒரு தேதியை கேட்டால், யோசிக்காமல் மறு நொடியே அந்த நாளுக்கான கிழமையை கூறுகிறான்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    உடனுக்குடன்...:

    சிறுவனின் தாயார் தமிழ்ச்செல்வி கூறுகையில்,''ஓர் ஆண்டுக்கு முன், குறிப்பிட்ட தேதியில், அவன் என்ன நிற உடை அணிந்தான், நான் என்ன குழம்பு வைத்தேன் என்பதையும் கூறுகிறான். ஒரு பாடலை கேட்ட உடனே, எந்த பாடகர் பாடினார் என, கூறிவிடுகிறான். ஒரேநாளில், 1 முதல் 100 வரை உள்ள இந்தி வார்த்தைகளை மனப்பாடம் செய்துவிட்டான். 3100ம் ஆண்டுக்கு மேல்உள்ள காலண்டர் கிடைக்காததால், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கிழமை குறித்து கேட்க முடியவில்லை,'' என்றார்.
    ஆசை என்ன?

    தொடர்ந்து, தந்தை கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: சேசுராமுவுகுள் இந்த திறமை எப்படி உருவானது என, கண்டுபிடிக்க வேண்டும். யாரிடம் அழைத்து சென்றால் விடை கிடைக்கும் என, தெரியவில்லை. அவனின் இந்த திறமையை மேற்கொண்டு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவும் வழி தெரியவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் கற்று கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
    - -நமது நிருபர் -

    No comments: